கண்கள்
காணும்வரை
கவிஞன் நானுமில்லை !
கண்ணில்
பட்டுவிட்டாய்
கற்பனைக் கேதெல்லை !!
கவிநூறு தோணுதடி !
காகித
பாலையெல்லாம்
கவிச்சோலை ஆகுதடி !!
மீனெனும்
விழிகளில்லை
தேனெனும் குரலுமில்லை...
ஊனெனக்
கலந்து விட்டாய்
உன்னைவிட அழகியில்லை !
பாவை
கடக்கும்வரை
பாதை எனக்குமில்லை
பூவைப்
பார்த்தவண்டின்
பயணம் முடிவதில்லை !
சித்தத்தில்
கலந்துவிட்டாய்
சிறுமனம் பறித்துவிட்டாய்
புத்தகப்
புதுப்பெண்ணே
புத்தியில் நிறைத்தேனே !
காதல்
பாவைகண்டால்
காளையர் பித்தராவார் !
பேதையும்
அறிஞராவார் – நல்
புத்தகப் பாவையாலே !
பாண்டூ,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
6 ஜவுளிக்கடை வீதி, சிவகாசி – 626123.
செல் :
9843610020
அழகிய நடை... எளிமையான வரிகள்....
ReplyDeleteசிவகாசியிலிருந்து ஒரு கவிதை சரவெடியா...
வாழ்த்துக்கள்...
வணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் அழகு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Congratulations
ReplyDeleteநன்றி தோழர்
Deleteவாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி
Delete