(11 ஆகஸ்ட் 2013 தினமலர்-வாரமலர் இதழில் வெளியான கவிதை)
நம் சிறகுகள்...
பிறர் பறப்பதற்கா ?
நம் சுதந்திரம்...
பிறர் ஆள்வதற்கா ?
சிறுவர்களே!
வசந்தச் சிறகுகள்...
திரை அரங்கிலே தொலைத்திடவோ ?
இளைஞர்களே!
சிந்தனைச் சிறகுகள்...
காதல் சிறையிலே பூட்டிடவோ ?
தாய்மார்களே!
கூர்மதிச் சிறகுகள்...
சின்னத்திரைச் சீரியலிலே சிதைத்திடவோ ?
வாக்காளர்களே!
வாக்குச் சிறகுகள்...
அரசியல்வாதியிடம் வாடகைக்கு விட்டிடவோ ?
பாட்டாளித் தோழரே!
உழைப்புச் சிறகுகள்...
பணமுதலையிடம் அடகு வைத்திடவோ ?
பட்டதாரிகளே!
திறமைச் சிறகுகள்...
பன்னாட்டு திமிங்கலத்திடம் பறிகொடுத்திடவோ ?
இன்னும் ! இன்னும் !
உதிர்ந்திட்ட நம் சிறகுகளோ...
ஏராளம் ! ஏராளம் !
இனியாவது...
பெற்ற சுதந்திரத்திற்கான இனிப்போடு...
பெற வேண்டிய சுதந்திரத்திற்கான
கண்ணீரையும் பிரசவிப்போம் !
உயரட்டும்
தேசியக் கொடியோடு
நமது சிறகுகளும்...
சுதந்திரமாய் !!
- பாண்டூ
- த.க.இ.பெருமன்றம்
- 6 ஜவுளிக்கடை வீதி
- சிவகாசி – 626123
- 9843610020
வணக்கம்
ReplyDeleteகவிதை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது சரிதான் உங்கள் வலைப்பக்கம் வருவது இதுதான் முதல்த்தடவை நேரம் மின்சாரம் இருந்தால் வாருங்கள் நம்ம பக்கமும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் சார்
Deleteஆழமான கருத்துக்களுடன் கவிதை அருமை
ReplyDeleteநன்றி வேல் முருகன் சார்!
Delete